இடை வெளிகளாய்..

இடை வெளிகளாய் எதுவுமில்லை.
நிஜத்தில் ஓயாத நினைவுகள்.
அன்பென்றால் என்னவென்று உன்னில் 
கற்க்கத்தான் உன்னிடம் வந்துசேர்ந்தேனோ?
காதல், காமம் தாண்டி கண்டு கொண்ட இந்த பிரியம் 
அதே பிரியத்துடன் உன்னைத்தேடிக்கொண்டே தான் இருக்கும்.
நிஜத்தில் நீ அனுபவிக்கும் தினச்சடங்குகளின் 
தன்மைகள் எனக்கு தெரியாது.
ஆனால், வாழலுக்கும் சலித்துக்கொள்வதற்கும் நடுவே 
மௌன குருவாகிப்போன உன் மர்மப்புன்னகை 
தரும் அர்த்தங்கள் ஆயிரம்.
மூக்கு வழியாய் துவங்கி தொண்டை வழியே 
வழிய விடும் உன் ஒவ்வொரு சிரிப்பிலும் 
ஒரு அணுகுண்டின் கர்ப்பமிருக்கும்.

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.