வயது வந்தோர் கல்வி; வயதானோர்க்கும் கற்பி.

ஒரு குரூரத்தின் முகம் அசிங்கமாயிருக்க வேண்டிய அவசியமில்லை.
அழகன் சிரிப்புப்புற்றின் பின்னும் நல்ல பாம்பர் உண்டு.
ஆன்மீக புலித்தோலிலும் அருவருப்பின் கறைகள் உண்டு.
இல்லத்து சொந்தத்திலும் இளமையான தாத்தாக்கள் உண்டு.
ஈரமற்ற இதயம் கொண்ட பதிவான பணியாளருண்டு.
உற்றார், உறவிலும் தொட்டுப்பேசும் தொந்தர் உண்டு.
ஊரெங்கும் ஊர்ந்து செல்லும் வேட்டையர் உண்டு.
எழில் தவறன்று. வனப்புகளும் ஸ்தனங்களும் ஆபத்தன்று.
ஏழாம் அறிவால் ஆறறிவரை அறிந்து கொள்.
ஐம்பூத மெய் காட்டும்
ஐம்பூத மெய் காட்டும் அழகெல்லாம் கானலே.
ஒருமுகமனசெல்லாம் வெல்லும் போரினில் 
தேகச்சிதைவரை கண்டு கொள். வென்று நில்.
ஓவியப்பாவையர் சிதைத்தலை தடுத்திட கருத்தாய் காத்திடு.
ஓளஷத்காதலை, அமிழ்தாம் காமுறலை. உலகம் காத்திட உணர்த்திடு.
அஃதே நீ அறிய வேண்டியதும், அறிவிக்க வேண்டியதும்.
பி.கு: ஐ லவ்யூ சொல்லி ஆசைகள் தீர்ப்பதிலும் பெரும்பாவம் வேறேதும் இல்லை

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.