முன்மேகம்

தீர்க்கமாய் செல்லும் தீஞ்சடரை பஞ்சுப்போர்வையிட்டா பதுக்கப்பார்க்கின்றாய்?
காலத்தின் கையில் நீ அம்பு.
நில்லாது செல்.
ஆனாலும் உன் திசையை முடிவு செய்யும்
விரல் நீயே.
ஒன்பதாம் திசை உனதாகட்டும்.
எட்டுகள் எட்ட நிற்கட்டும்.
உன் முடிவுகள் நீயே எடுத்ததாகட்டும்.
தனியேகூட்டத்தில் நின்றாலும் தனித்தே நில்.
எல்லாரையும் போலாகி நின்றால், எழுநூறுக்கும் மேலான கோடியில் உன் பெயர் உனதல்ல.
ஆசைப்படாதே உன் பெயர் எழுதப்படும்.
நீயே உன் வரலாறு.
முன்மேகமெல்லாம் சூரியச்சுடர் முன் சில காலமே.

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.