திரும்ப, திரும்ப...


திரும்ப, திரும்ப வாழ்வின் வழமைகள்.
இதமான இன்றின் கடமைகள்.
நேற்றின் ஞாபகங்கள் இனிமையானவை.
நெஞ்சுக்குள் பெய்த பூமழை.
கணங்களின் மகிழ்வுகளை அசைபோடுதலின் ஆனந்தமே வாழ்வில் எஞ்சி நிற்பது.
நினைவு-மறதி இரண்டிற்குமிடையேயான சடுகுடுவே நம் வாழ்வெனும் கரகாட்டம்.
ஆதார நினைவு சுருதிகளை மீட்டும் பிடித்தவர்கள் மற்றும் பிடித்தவை இல்லாது போனால்...
காலையும் வீணே...
மாலையும் வீணே...
எங்கேயும் எப்போதும்,
நீ வேண்டும்,
நின் நினைவு வேண்டும்  என உச்சாடனம் பாடா ஜீவனில்லை.
அதை பக்தியென்று நீங்கள் கொண்டாடினால் அது உங்கள் பதம்.
பரம பதம் தொழுதார்க்கும் மனித நேயம் பேசுவோர்க்கும்...
திரும்ப, திரும்ப ...
ஒவ்வொரு காலையும் ஆனந்தமே.
A Gladys Stephen காலை வணக்கம்!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.