புகழ் மாலை.

சாதனைகள் பேச வைக்கின்றது.
பேச்சு சாதனையை நோக்கி இட்டுச்செல்கின்றது. 
நல்லவைகளின் பேச்சுக்களில் நன்மைகள்.
தீயவைகளின் பேச்சுக்களில் தீர்க்கவியலா தீமைகள். பேச்சுக்களாலேயே நம் மூச்சின் வீச்சுக்கள்.
அருகாமைகளை எப்பொழுதுமே ஆராய வேண்டும்.
அருகார்ந்ந பேச்சுக்களெல்லாம் எப்போழ்தும் அறிவார்ந்தவை அல்ல. புகழின் வாய்களுக்கு எப்பொழுதும் பயந்திருங்கள்.
ஏனெனில் புகழலின் முடிவில்தான் இகழ்ச்சிகள் ஆரம்பம்.
இகழ்ந்தவை புகழலென்பது ஆயிரத்தில் ஒன்று.
இயல்பாயிருந்தால் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அடிபணிய மாட்டோம். புகழ் பேச்சு ஆரம்பிக்கும்பொழுதே நமக்குள்ளாக ஒரு இகழ்முறுவல் ஆரம்பமாகும்.
வஞ்சகப்புகழ்ச்சியென்று சொல்லாமலா சொன்னார்கள்?
அதிகம் நேசிப்பதாக ஆரம்பிப்பவர்களே எளிதில் இகழுகின்றார்கள்.
இதயத்தை இழகாகாத பாராட்டுக்களே நம்மை வாழ வைக்கும்.
பாராட்டுக்கள் ஒரு விதத்தில் எச்சரிக்கை, வேண்டுகோள், விண்ணப்பம் மற்றும் பிராத்தனை.
சமநிலை மனநிலைத்தொட்டுவிட்ட எந்த மனமும் புகழ்வரிகளின் வலைகளில் மாட்டிக்கொள்ளாது.
எலும்பற்ற நாவு எதையும் பேசும்.
பேச்சுக்களை கேட்டுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ள அவசியமில்லை.
மனம் எப்பொழுதும் ஒரு சலனமற்ற தடாகமாய் வீற்றிருக்கட்டும்.
அதில் நம் முகம் தெரியும்.
அதன் புன்னகையில் வரும் புகழை என்றும் மறக்கவியலாது.
ஏனெனில், நம்மை விட நம்மை யாருக்குத்தெரியும்?
புகழும்-இகழும் ஒன்றேயெனக்கற்றுத்தந்த புகழ்மாலையே மாலைவணக்கமுனக்கு!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.