நானாக நானில்லை...

நானெனும் காரணம் நாநிலம்
மீதினில் தந்திடும் தந்தனனே, 
எனை கண்டிடும் கொண்டிடும்
மாலையைத் தந்திடு தங்கமே
தமிழ்தனமே,
வினை வென்றிட நின்றிட
நித்தமும் தந்திடு
வெற்றியின் வித்தகமே,
பல பண்டிகைக் கொண்டிட
கையிடை கனன்றிடும்
மாலையின் ஒளி மதியே,
நம் சந்திர முத்திரை
கொண்டிடும் கொங்கையர்
மங்கலம் வாழ்த்திடும்
நித்தினமே.
பல பண்ணிசைப் பாடல்கள்
பாடிடும் பாவிசை மங்கலமே,
அருள் கொண்டிடும்
வானவர் வாழ்த்துகள்
வாழ்த்திடும்
வாய் வழி வல்லினமே.
சில வேளைகள் வீழ்த்திடும்
வீழலின் வீணரை
வென்றிடு நீ மனமே,
கலை கண்டிடும் கொண்டிடும்
கலைஞரைக் காத்திடும்
கலை வழி கலையினமே,
சுவை தந்திடும் உப்பினை
உண்டிடும் உண்டவர் உந்தனின் சமர்பணமே.
மாலையே மாலையில் வா!
A GGladys Stephenevening rhyme!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.