காலை எனும் கலை..

காலையில்,
அதிகாலையில் 
கண்விழித்தல் ஒரு கலை.
காலையைக்காணலே
ஒரு கலை.
காலை தொழுதலாம் கண்மூடி தியானித்தலும் கலையே.
காலைச்சமையல்
ஓர் பெருந்தவம்.
சிந்தனைக்குள் ஆயிரம் ஓடும்,
அதன் சிறகுகளின் படபடப்பின் நடுவிலும் பொங்கி வழியும் பொன்சோற்றுப்பருக்கை வேகம் அதனினும் பெருந்தவம்.
எனக்காய் நான் சமைக்கும்
என் சமையலின் நேரங்களில் சுவையோடு சத்தாம் சேதியும் வானொலியின் மூலம்
சேர்க்கின்றேன்.
வாழல் வாய்ப்பென்றால்
காலை வாழ்வின் கலை.
அது வாழ நினைப்போர்க்கான கலை.
வாழ்வோம்.
வாழல் அழகு.
வாழ்ந்து காட்டுவோம்.
Gladys Stephen " Life is beautiful " statement.
Good morning to all!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.