ஓயாத காலை..


🎷🎷🎷🎷🎷🎷

காலைகள் ஓய்வதில்லை.

உயிருள்ளவரை காலைகளே உயிரெழுப்பிகள்!

மனசுக்குள் ஆயிரம் மௌனக்கசப்புகள் மறைந்து கிடக்கலாம்.
ஆத்மாவின் அசைவு அசாத்தியமானது.

உயிர், மனம், ஆன்மா - முக்கூடலில் முத்துக்குளிப்பதே வாழ்க்கை.

வாழல், வாழ்பவர்களுக்கான அத்யாவசியம்.
திரும்ப, திரும்ப எழும் காலைகளிலெலாம் கடனோட்டம், கடமையோட்டம்.

மூச்சின் பேச்சை மறந்ததாய் மற்றவர் பேசும் வரை நம் பேச்சின் மூச்சே இந்த பிரபஞ்ச பேரசைவு.

சலிப்புகளும், சஞ்சலங்களும் மாம்ச தேகத்தில் மனதின் சமிக்கைகள்.
உயிரைத்தாங்கும் ஆத்மாவின் ராகங்களில் விடியல்களின் களங்கள் விழுப்புண் தாண்டிய ஜெயபேரிகை.

கொட்டு முரசென சங்கநாதம் இசைக்கவியலாது போனாலும், அசைந்தாடும் காற்றில் முட்டி மோதி வானம் தொடும் முயற்சியாய், விதை கீறி முளைக்கும் துளிர்ப்பிலேயே விடியும் என் பகல்கள்.

வாழ்வேன்.

இப்பகலிலும் வாழ்த்துச் சொல்லி வாழத்துவங்குகின்றேன்!

A Gladys Stephen Good Morning Wishes!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.