முன்னிரவு..
👁️👁️👁️👁️👁️
மாலை மயங்கிற்று.
இருள் கவிழ்ந்தது.
அழகாய் தோன்றும் வானில், அழகுக்கழகாய் மீன்களும் சந்திரியும்.
வீசாத காற்றாய்
பகலுஷ்ண மிச்சம்.
பக்கத்தில் பாயும் பவானி.
கால்நடந்து சுவடுகள் விட்டு வந்தேன் மாலையில்.
ஒரு சின்ன கர்வம் !
பவானி ஓடுகின்றாள்.
எத்தனை நாளோ தெரியாது.
ஆனாலும், கண்ணீருக்காய் காட்டாறாய் பாய்ந்து வந்த காவேரியை மன்னிக்கலாம்.
தமிழோரே இனியாவது பிளாஸ்டிக் தம்ளரை நீர் நிலைகளில் வீசாதிருப்போமா?
இரவுக்கனவில் கழிவுமேலாண்மைக்கரிசனம் வந்தால் விடியலில் நிறைவேற்றுவோமே !
சூழல் கரிசனத்துடன் A Gladys Stephen Good night !
Comments
Post a Comment